Monday, September 01, 2014

விடியலை நோக்கி

ஆயிரம் நட்சத்திரங்கள் கூடினாலும்

நிலா(நீ) ஆகாது !

நீயில்லாமல் ரணமாய் துடிக்கும்

உன்னுடனே மட்டுமே

பேசிப் பழகிய இதயம் !

இரவெல்லாம் எதையோ

தேடிக் கொண்டிருக்கிறேன் !

உறக்கங்கள் கூட

உளரல்களாகவே வந்து போகிறது !

நீயில்லாமல் ஒவ்வொரு வினாடியும்

அத்தியாயமாய் கழிகிறது !

கானல் நீராய் வந்து

போகும் உனது பிம்பங்கள் !

காத்துக் கொண்டிருக்கிறேன் விடியலாவது

உன்னோடு இருக்கட்டும் என்ற

நம்பிக்கையில்…



காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...