Wednesday, February 05, 2014

வாடா மலர்

நேற்று மலர்ந்த ரோஜாக்கள்

மெச்சிக்கொண்டன

அதன் மென்மையைப் பற்றி…

பாவம் மறந்து விட்டனவோ

என்னவோ உனது உதடுகளை !

காலையில் மலர்ந்ததற்கே நிமிர்ந்து 

நிற்கின்றன கர்வத்துடன்…

பாவம் நீ என்றும் வாடா மலர்

என்று அறியாமல் !

பறித்தது கூடத்  தெரியாமல்

எள்ளி நகையாடிக் கொண்டன…

அதனைப் பறித்தது

நீ என்பதால் !…


No comments:

Post a Comment

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...