Friday, May 10, 2013

முதன் முதலாய் கண்ட நிகழ்வுகள்

தொலைவில் 

கண்ட உனது உருவம் ! 

நாணத்தின் உச்சத்தில் பூமியின் 

தலைகோதும் உனது பாதங்கள் ! 

கண்களைச் சுண்டி இழுக்கும் 

நாட்டியப் பார்வை !

குரலுக்கு ஏற்ப நயம் பிடித்து 

ஆடும் வீணை விரல்கள் !

மரணத்தின் பிடியில்  கூட பார்க்கத்

துடிக்கும் வசீகரமான சிரிப்பு ! 

அனைத்தும் முதல் பார்வையின்

அகலாத நினைவுகளாய் !…


No comments:

Post a Comment

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...