Tuesday, May 21, 2013

தீதும் நன்றும் பிறர்தர வாரா

பூமியை அழித்தது போதாதுயென்று

புறப்பட்டு விட்டான் செவ்வாய்க்கு  

புண்ணியமாய் போகட்டும் அதையாவது 

விட்டுவிடு பிழைத்துக் கொள்ளட்டும்! 


விஞ்ஞானத்தின் விண்ணைத் தொடும் 

விஸ்வரூப வளர்ச்சிக்கு விலையாய் கொடுத்தது 

என்னமோ விலைமதிப்பில்லா  உயிர்களை !


பிறர் தலைமுறை அழித்து நம் தலைமுறை  

தழைக்க  வெறிகொண்டு அழைந்தோம்

வெற்றியும் கண்டோம் இலவச இணைப்பாய் 

பெற்றோம் இயற்கையின் பகையையும் !


மரங்களை வெட்டி வெட்டி மனிதர்களை 

 வெட்ட பழகிக் கொண்டோம்

காலம் கடந்து உணர்வாய் அப்பொழுது 

பூமியும் சுடுகாடாய் போயிருக்கும் !


காடுகளை அழித்து விலங்குகளை 

வீதியில் ஓடவிட்ட நாம் 

வீதியில் ஓடும் நாள் வெகுதூரம் இல்லை !


மானிடம் மட்டும் போதாது இப்புவியினில்

வாழ என்ற மாற்றம் வேண்டும் ! 


தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதை 

உணர்ந்து பசுமை உலகம் படைத்திடுவோம் 

இயற்கையின் பாசத்தை பெற்றிடுவோம் !



No comments:

Post a Comment

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...