எவ்வளவோ புத்தகங்களை வாசித்து இருந்தாலும் மூன்றாம் உலகப் போர்புத்தகம் ஒரு சிறு தாக்கத்தை உண்டாக்கியது என்றால் அது மிகையல்ல.
நாட்டின் முதுகெலும்பான விவசாயம் தேய்ந்து கொண்டு இருக்குகிறது என்பதை மறுக்காமல் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயம்.
இந்த நாட்டில் பல கருத்தமாயிகள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்
மூன்றாம் உலகப் போர் என்றோ ஆரம்பித்து விட்டது என்பது தான் நிசத்தமான உண்மை. இது மனிதனுக்கும் இயற்க்கைக்கும் நடக்கும் போர்.
இப்புத்தகத்தை வாசித்த பிறகு நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதை நினைத்து கர்வம் கொள்ளவே ஆசைப்படுகிறேன்.
விவசாயம் மனிதனால் தான் அழிந்து கொண்டு இருக்குகிறது என்பதை தெளிவாக விளக்கி இருக்குகிறார் வைரமுத்து.
விளைச்சல் என்ற போர்வையில் விஷத்தை(பூச்சிக் கொல்லிகளை) மென்று தின்று கொண்டு இருக்கிறோம் என்பதை தெரியாமல் விழுங்கி வருகிறோம்.
கடைகளில் பிளாஸ்டிக் பைகளை கேட்டு வாங்கி மண்ணை மக்கா பொருளாய் மாற்றி வருகிறோம். நுண்நுயிரிகளான விவசாயத்தின் ஆணிவேறை அழித்து விவசாயிகளின் மரணத்தில் நமக்கும் கணிசமான பங்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.
நம் அனைவராலும் விவசாயத்தின் வளர்ச்சியில் பங்கு பெற முடியும். முடிந்த வரை பிளாஸ்டிக் இல்லா உலகம் படைப்போம் நாமும் வளர்ச்சியில் பங்கு பெறுவோம் . கார்பன் இல்லா உலகம் படைத்து நம் தலைமுறை காப்போம்.
No comments:
Post a Comment