Monday, June 17, 2013

தந்தைக்காக

நான் ஊர் சுற்ற என்றுமே ஆசை பட்டதில்லை

உங்களை மட்டுமே சுற்றி வர கனவு கண்டேன்

ஏனென்றால் உங்களை உலகம் என்று நம்பியதால் !


நீங்களோ நான் பழிங்கு சிலையானதாய் பார்க்கிறீர்கள்

ஆனால் என்னைச் செதுக்கிய உளியாய் உங்களை பார்க்கிறேன் !


கண்களும் கலங்கி விடும் எங்களுக்காக நீங்கள்

ஓடாய் உழைத்து தேய்ந்ததை நினைக்கையில் !


எங்களை அடித்து வளர்த்த நீங்கள்

அணைத்து வளர்க்க தவறியதில்லை என்றுமே !


உங்களின் நிழல் பட்டு வளர்ந்ததால் என்னமோ

எங்களை என்றுமே கட்டுப்படுதியது இல்லை நீங்கள் !


இது எங்களுக்காகவே இன்னும் உழைத்து கொண்டிருக்கும்

ஒரு உன்னத மனிதனுக்காக …




No comments:

Post a Comment

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...