Tuesday, October 08, 2013
Monday, September 02, 2013
Monday, June 17, 2013
தந்தைக்காக
நான் ஊர் சுற்ற என்றுமே ஆசை பட்டதில்லை
உங்களை மட்டுமே சுற்றி வர கனவு கண்டேன்
ஏனென்றால் உங்களை உலகம் என்று நம்பியதால் !
நீங்களோ நான் பழிங்கு சிலையானதாய் பார்க்கிறீர்கள்
ஆனால் என்னைச் செதுக்கிய உளியாய் உங்களை பார்க்கிறேன் !
கண்களும் கலங்கி விடும் எங்களுக்காக நீங்கள்
ஓடாய் உழைத்து தேய்ந்ததை நினைக்கையில் !
எங்களை அடித்து வளர்த்த நீங்கள்
அணைத்து வளர்க்க தவறியதில்லை என்றுமே !
உங்களின் நிழல் பட்டு வளர்ந்ததால் என்னமோ
எங்களை என்றுமே கட்டுப்படுதியது இல்லை நீங்கள் !
இது எங்களுக்காகவே இன்னும் உழைத்து கொண்டிருக்கும்
ஒரு உன்னத மனிதனுக்காக …
படித்ததில் பிடித்து : மூன்றாம் உலகப் போர்
எவ்வளவோ புத்தகங்களை வாசித்து இருந்தாலும் மூன்றாம் உலகப் போர்புத்தகம் ஒரு சிறு தாக்கத்தை உண்டாக்கியது என்றால் அது மிகையல்ல.
நாட்டின் முதுகெலும்பான விவசாயம் தேய்ந்து கொண்டு இருக்குகிறது என்பதை மறுக்காமல் ஒப்புக் கொள்ள வேண்டிய விஷயம்.
இந்த நாட்டில் பல கருத்தமாயிகள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்
மூன்றாம் உலகப் போர் என்றோ ஆரம்பித்து விட்டது என்பது தான் நிசத்தமான உண்மை. இது மனிதனுக்கும் இயற்க்கைக்கும் நடக்கும் போர்.
இப்புத்தகத்தை வாசித்த பிறகு நானும் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதை நினைத்து கர்வம் கொள்ளவே ஆசைப்படுகிறேன்.
விவசாயம் மனிதனால் தான் அழிந்து கொண்டு இருக்குகிறது என்பதை தெளிவாக விளக்கி இருக்குகிறார் வைரமுத்து.
விளைச்சல் என்ற போர்வையில் விஷத்தை(பூச்சிக் கொல்லிகளை) மென்று தின்று கொண்டு இருக்கிறோம் என்பதை தெரியாமல் விழுங்கி வருகிறோம்.
கடைகளில் பிளாஸ்டிக் பைகளை கேட்டு வாங்கி மண்ணை மக்கா பொருளாய் மாற்றி வருகிறோம். நுண்நுயிரிகளான விவசாயத்தின் ஆணிவேறை அழித்து விவசாயிகளின் மரணத்தில் நமக்கும் கணிசமான பங்கு உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது.
நம் அனைவராலும் விவசாயத்தின் வளர்ச்சியில் பங்கு பெற முடியும். முடிந்த வரை பிளாஸ்டிக் இல்லா உலகம் படைப்போம் நாமும் வளர்ச்சியில் பங்கு பெறுவோம் . கார்பன் இல்லா உலகம் படைத்து நம் தலைமுறை காப்போம்.
Tuesday, May 21, 2013
தீதும் நன்றும் பிறர்தர வாரா
பூமியை அழித்தது போதாதுயென்று
புறப்பட்டு விட்டான் செவ்வாய்க்கு
புண்ணியமாய் போகட்டும் அதையாவது
விட்டுவிடு பிழைத்துக் கொள்ளட்டும்!
விஞ்ஞானத்தின் விண்ணைத் தொடும்
விஸ்வரூப வளர்ச்சிக்கு விலையாய் கொடுத்தது
என்னமோ விலைமதிப்பில்லா உயிர்களை !
பிறர் தலைமுறை அழித்து நம் தலைமுறை
தழைக்க வெறிகொண்டு அழைந்தோம்
வெற்றியும் கண்டோம் இலவச இணைப்பாய்
பெற்றோம் இயற்கையின் பகையையும் !
மரங்களை வெட்டி வெட்டி மனிதர்களை
வெட்ட பழகிக் கொண்டோம்
காலம் கடந்து உணர்வாய் அப்பொழுது
பூமியும் சுடுகாடாய் போயிருக்கும் !
காடுகளை அழித்து விலங்குகளை
வீதியில் ஓடவிட்ட நாம்
வீதியில் ஓடும் நாள் வெகுதூரம் இல்லை !
மானிடம் மட்டும் போதாது இப்புவியினில்
வாழ என்ற மாற்றம் வேண்டும் !
தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதை
உணர்ந்து பசுமை உலகம் படைத்திடுவோம்
இயற்கையின் பாசத்தை பெற்றிடுவோம் !
புறப்பட்டு விட்டான் செவ்வாய்க்கு
புண்ணியமாய் போகட்டும் அதையாவது
விட்டுவிடு பிழைத்துக் கொள்ளட்டும்!
விஞ்ஞானத்தின் விண்ணைத் தொடும்
விஸ்வரூப வளர்ச்சிக்கு விலையாய் கொடுத்தது
என்னமோ விலைமதிப்பில்லா உயிர்களை !
பிறர் தலைமுறை அழித்து நம் தலைமுறை
தழைக்க வெறிகொண்டு அழைந்தோம்
வெற்றியும் கண்டோம் இலவச இணைப்பாய்
பெற்றோம் இயற்கையின் பகையையும் !
மரங்களை வெட்டி வெட்டி மனிதர்களை
வெட்ட பழகிக் கொண்டோம்
காலம் கடந்து உணர்வாய் அப்பொழுது
பூமியும் சுடுகாடாய் போயிருக்கும் !
காடுகளை அழித்து விலங்குகளை
வீதியில் ஓடவிட்ட நாம்
வீதியில் ஓடும் நாள் வெகுதூரம் இல்லை !
மானிடம் மட்டும் போதாது இப்புவியினில்
வாழ என்ற மாற்றம் வேண்டும் !
தீதும் நன்றும் பிறர்தர வாரா என்பதை
உணர்ந்து பசுமை உலகம் படைத்திடுவோம்
இயற்கையின் பாசத்தை பெற்றிடுவோம் !
Wednesday, May 15, 2013
Friday, May 10, 2013
Monday, April 29, 2013
Monday, March 18, 2013
Tuesday, February 05, 2013
Subscribe to:
Posts (Atom)
காதல்
நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh8Dc3Ym9Wl3Esn67sQWldSLWsTRDdkakDjolVgGSIvvDj9pc_9QuIp9BGWCUFq1WBpyCNI3Qdfb8LLE85PdeEEysuPuGiblWQ5Xms8_dDvbwJ1r5a4FOUVfpZWRyUqWSFaC8YEJek1R3VK/s640/4.jpg)
-
வானம் பொய்த்து விட்டதால் இயற்கையிடம் ஏமாறுகிறான் வியாபாறியாய் தோற்கிறான் அரசியலால் வஞ்சிக்கப்படுகிறான் ஆனால் எப்பொழுதும் ...
-
முன்னோக்கிச் செல்லும் பயணங்களிலும் பின்னோக்கியே செல்கிறது உன்னுடன் உறவாடிய நிகழ்வுகளும் நினைவுகளும் ! செல்லும் பாதையெல்லாம்...