Wednesday, December 12, 2012
Friday, December 07, 2012
தனிமையில் நான்
உன் கரம் பிடித்தே சாலையை
கடந்த பாதங்கள் நீயில்லாமல்
தயங்கியே கடக்கின்றன தனிமையில் !
உன் தோள் சாய்ந்தே
கண்ட உறக்கமும் நீயில்லாமல்
கலைந்தே போகிறது கவலையுடன் !
தினமும் உன் குரல் கேட்டே
விழிக்கும் அலைபேசியும் நீயில்லாமல்
காத்தே கிடக்கிறது மவுனமாய் !
காதல் வேர்களை படரவிட்டு
என் உணர்வுகளை மட்டும்
தனிமையில் தவிக்க விடுவதேனோ !
கடந்த பாதங்கள் நீயில்லாமல்
தயங்கியே கடக்கின்றன தனிமையில் !
உன் தோள் சாய்ந்தே
கண்ட உறக்கமும் நீயில்லாமல்
கலைந்தே போகிறது கவலையுடன் !
தினமும் உன் குரல் கேட்டே
விழிக்கும் அலைபேசியும் நீயில்லாமல்
காத்தே கிடக்கிறது மவுனமாய் !
காதல் வேர்களை படரவிட்டு
என் உணர்வுகளை மட்டும்
தனிமையில் தவிக்க விடுவதேனோ !
Monday, December 03, 2012
மயங்கினேன் சொல்ல தயங்கினேன்
நீ நாணி,குறுகி
தலை குனிந்து நெளியும்
போது கீழ் வானமும் சிவக்கிறது
வெட்கப்பட்டு!
ஒற்றையடி பாதையில்
கருப்பு சல்வாரில்
ஒற்றை ரோஜாவாய்
நீ செல்லும் போது
பாதையும் மெய் மறந்து
ரசிக்கிறது
செல்லும் திசை தெரியாமல் !
படைத்தவனையே
பதம் பார்க்க துடிக்கும்
பஞ்சலோக சிலையடி
நீ !…
இயற்கையையே
புரட்டி போட துடிக்கும்
எழில் மங்கை
நீ !…
இதில் நான் மட்டும்
எம்மாத்திரம் ! …
தலை குனிந்து நெளியும்
போது கீழ் வானமும் சிவக்கிறது
வெட்கப்பட்டு!
ஒற்றையடி பாதையில்
கருப்பு சல்வாரில்
ஒற்றை ரோஜாவாய்
நீ செல்லும் போது
பாதையும் மெய் மறந்து
ரசிக்கிறது
செல்லும் திசை தெரியாமல் !
படைத்தவனையே
பதம் பார்க்க துடிக்கும்
பஞ்சலோக சிலையடி
நீ !…
இயற்கையையே
புரட்டி போட துடிக்கும்
எழில் மங்கை
நீ !…
இதில் நான் மட்டும்
எம்மாத்திரம் ! …
நம்பிக்கை தான் பாஸ் வாழ்கை!…
இது வெறும் கதை அல்ல. ஒரு ரசிகனின் குமுறல்….
கிரிகெட் விளையாட தெருத் தெருவாக திரிந்த நாட்கள் தான் அதிகம். பரீட்சை நேரத்தில கிரிகெட் பார்த்து கோட்டை விட்டது தான் மிட்சம்.
இந்தியா தோற்ற போது உடைத்த பொருளுக்காக அப்பா அடித்த அடியை விட இந்தியா தோற்ற வலி தான் அதிகம்.
கிரிகெட் Player-காக வக்காலத்து வாங்கி வாங்கி வாய் வலித்தது தான் மிட்சம்.
அடுத்த Match win , இந்த Match win அப்படி வெறும் ஏமாற்றதுடன் வாழ்ந்த நாட்கள் தான் அதிகம்.
இப்படி ரொம்ப matter இருந்தாலும் அடுத்த Match WIN பண்ணுவோம்-nu நம்பிக்கையில் கிரிகெட் மேல உள்ள ஒரு மோகத்தில் ஒரு அடிமட்ட
ரசிகனாய் என்றென்றும் நான்.
Dhoniயும் கிரிக்கெட்யும்
Dhoni அன்போட ரசிகன் நான் நான் எழுதும் Letter..
ச்சி.. மடல்.. இல்ல கடுதாசி வெச்சுக்கலாமா? இல்ல கடிதமே இருக்கட்டும்..
எங்க படி..
Dhoni அன்போடு ரசிகன் நான் எழுதும் கடிதமே..
பாட்டாவே படுச்சிட்டியா?
அப்ப நானும்.. மொதல்ல Dhoni சொன்னல..
இங்க MSD போட்டுக்க.. MSD நம்ம Team-ல எல்லாரும் சௌக்கியமா?
நாங்க இங்க சௌக்கியம்..
MSD நம்ம Team-ல எல்லாரும் சௌக்கியமா? நாங்க இங்கு சௌக்யமே..
உங்களை நெனச்சு Match பாக்கும்போது கவலை மனசுல அருவி மாதிரி
கொட்டுது ஆனா Match பார்க்க ஒக்காந்தா கண்ணீர் முட்டுது…
உங்களை எண்ணி Match பார்க்கணும்னு நினைக்கையில் கவலை கொட்டுது..
அத்தான்..
Match பார்கையில் கண்ணீர் முட்டுது..
அத்தேதான்..
அஹ ஹ.. பிரமாதம்.. Cricket Match ! … Cricket Match .. படி..
Dhoni அன்போடு ரசிகன் நான் எழுதும் கடிதமே…
MSD நம்ம Team-ல எல்லாரும் சௌக்கியமா? நாங்க இங்கு சௌக்யமே..
உங்களை எண்ணி Match பார்க்கணும்னு நினைக்கையில் கவலை கொட்டுது..
Match பார்கையில் கண்ணீர் முட்டுது..
Dhoni அன்போடு ரசிகன் நான் எழுதும் கடிதமே…
MSD நம்ம Team-ல எல்லாரும் சௌக்கியமா? நாங்க இங்கு சௌக்யமே..
எங்களுக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும் அது என்னவோ
தெரியல என்ன மாயமோ தெரியல..
எங்களுக்கு ஒன்னுமே ஆவரது இல்ல..
இதையும் எழுதிக்கோ..
நடுல நடுல Ganguly , Sachin, Dravid இதெல்லாம் போட்டுக்கணும்..
தோ பாரு எங்களுக்கு என்ன காயம்னாலும் ஒடம்பு தாங்கிடும் உங்க உடம்பு
தாங்குமா??
தாங்காது..
Dhoni Dhoni Dhoni ..
அதையும் எழுதணுமா??
அது.. Cricket .. எங்க Cricket … எங்க Dhoni Cricket …
என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது ஆனா நா அழுது என்
சோகம் உன்னை தாக்கி அது Matchயை பாதிக்கும் -
அப்படினு நெனைக்கும்போது வர அழுக கூட நின்னுடுது..
மனிதர் உணர்ந்துகொள்ள இது சாதாரண விளையாட்டு அல்ல.. ..
அதையும்தாண்டி புனிதமானது.. புனிதமானது.. புனிதமானது.. புனிதமானது..
உண்டான காயமெங்கும் தன்னாலே ஆறிப்போன மாயம் என்ன பொன்மானே
பொன்மானே..
என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கி கொள்ளும் உந்தன் மேனி
தாங்காது செந்தேனே..
Cricket மேல் உள்ள காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது..
எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது..
மனிதர் உணர்ந்து கொள்ள, இது சாதாரண விளையாட்டு அல்ல..
அதையும் தாண்டி புனிதமானது..
Dhoniயே Cricket சாமியே நீதானே தெரியுமா?
Dhoniயே Cricket-ல் நீயும் பாதியே அதுவும் மற்றவர்களுக்கு புரியுமா?
சுப லாலி லாலியே லாலி லாலியே அபிராமி லாலியே லாலி லாலியே..
Dhoniயே World Cup வாங்கி தந்த சாமியே நீதானே தெரியுமா? மற்றவர்களுக்கு புரியுமா?
ச்சி.. மடல்.. இல்ல கடுதாசி வெச்சுக்கலாமா? இல்ல கடிதமே இருக்கட்டும்..
எங்க படி..
Dhoni அன்போடு ரசிகன் நான் எழுதும் கடிதமே..
பாட்டாவே படுச்சிட்டியா?
அப்ப நானும்.. மொதல்ல Dhoni சொன்னல..
இங்க MSD போட்டுக்க.. MSD நம்ம Team-ல எல்லாரும் சௌக்கியமா?
நாங்க இங்க சௌக்கியம்..
MSD நம்ம Team-ல எல்லாரும் சௌக்கியமா? நாங்க இங்கு சௌக்யமே..
உங்களை நெனச்சு Match பாக்கும்போது கவலை மனசுல அருவி மாதிரி
கொட்டுது ஆனா Match பார்க்க ஒக்காந்தா கண்ணீர் முட்டுது…
உங்களை எண்ணி Match பார்க்கணும்னு நினைக்கையில் கவலை கொட்டுது..
அத்தான்..
Match பார்கையில் கண்ணீர் முட்டுது..
அத்தேதான்..
அஹ ஹ.. பிரமாதம்.. Cricket Match ! … Cricket Match .. படி..
Dhoni அன்போடு ரசிகன் நான் எழுதும் கடிதமே…
MSD நம்ம Team-ல எல்லாரும் சௌக்கியமா? நாங்க இங்கு சௌக்யமே..
உங்களை எண்ணி Match பார்க்கணும்னு நினைக்கையில் கவலை கொட்டுது..
Match பார்கையில் கண்ணீர் முட்டுது..
Dhoni அன்போடு ரசிகன் நான் எழுதும் கடிதமே…
MSD நம்ம Team-ல எல்லாரும் சௌக்கியமா? நாங்க இங்கு சௌக்யமே..
எங்களுக்கு உண்டான காயம் அது தன்னால ஆறிடும் அது என்னவோ
தெரியல என்ன மாயமோ தெரியல..
எங்களுக்கு ஒன்னுமே ஆவரது இல்ல..
இதையும் எழுதிக்கோ..
நடுல நடுல Ganguly , Sachin, Dravid இதெல்லாம் போட்டுக்கணும்..
தோ பாரு எங்களுக்கு என்ன காயம்னாலும் ஒடம்பு தாங்கிடும் உங்க உடம்பு
தாங்குமா??
தாங்காது..
Dhoni Dhoni Dhoni ..
அதையும் எழுதணுமா??
அது.. Cricket .. எங்க Cricket … எங்க Dhoni Cricket …
என்னனு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது ஆனா நா அழுது என்
சோகம் உன்னை தாக்கி அது Matchயை பாதிக்கும் -
அப்படினு நெனைக்கும்போது வர அழுக கூட நின்னுடுது..
மனிதர் உணர்ந்துகொள்ள இது சாதாரண விளையாட்டு அல்ல.. ..
அதையும்தாண்டி புனிதமானது.. புனிதமானது.. புனிதமானது.. புனிதமானது..
உண்டான காயமெங்கும் தன்னாலே ஆறிப்போன மாயம் என்ன பொன்மானே
பொன்மானே..
என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கி கொள்ளும் உந்தன் மேனி
தாங்காது செந்தேனே..
Cricket மேல் உள்ள காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது..
எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது..
மனிதர் உணர்ந்து கொள்ள, இது சாதாரண விளையாட்டு அல்ல..
அதையும் தாண்டி புனிதமானது..
Dhoniயே Cricket சாமியே நீதானே தெரியுமா?
Dhoniயே Cricket-ல் நீயும் பாதியே அதுவும் மற்றவர்களுக்கு புரியுமா?
சுப லாலி லாலியே லாலி லாலியே அபிராமி லாலியே லாலி லாலியே..
Dhoniயே World Cup வாங்கி தந்த சாமியே நீதானே தெரியுமா? மற்றவர்களுக்கு புரியுமா?
வறுமைக் காதல்
கட்டிக் கொடுத்த பெரியவளோ கால் பவுனு
கல் வைச்ச முக்குத்தி
கேட்டு வந்து மாசம் ஆறாக !
இளையவளோ சீமக்கார மவராசன்
கைப் பிடிச்சுக் கரைசேர காத்திருக்க !
சின்னவளோ தாய்மாமன் சீர் நோக்கி
பச்சை குடில் தேடி படர்ந்திருக்க !
மேட்டுக்காட்டில் விதைச்ச நெல்லோ
வறட்சியிலும் வானம் பாத்து பல் இளிக்க !
காப்படி கஞ்சிக்கே கால் வருஷம் காத்திருக்க !
எனக்கு வாக்கப்பட்டு வந்து
வாழுந்து முடிச்சு என்னை பாதியிலே
விட்டு போனவளுக்கு
படையல் வைக்க பச்சக்கண்ணாடி
வளையல் தேடி மீதி உயிரும் போனதென்னோ !
கல் வைச்ச முக்குத்தி
கேட்டு வந்து மாசம் ஆறாக !
இளையவளோ சீமக்கார மவராசன்
கைப் பிடிச்சுக் கரைசேர காத்திருக்க !
சின்னவளோ தாய்மாமன் சீர் நோக்கி
பச்சை குடில் தேடி படர்ந்திருக்க !
மேட்டுக்காட்டில் விதைச்ச நெல்லோ
வறட்சியிலும் வானம் பாத்து பல் இளிக்க !
காப்படி கஞ்சிக்கே கால் வருஷம் காத்திருக்க !
எனக்கு வாக்கப்பட்டு வந்து
வாழுந்து முடிச்சு என்னை பாதியிலே
விட்டு போனவளுக்கு
படையல் வைக்க பச்சக்கண்ணாடி
வளையல் தேடி மீதி உயிரும் போனதென்னோ !
அன்னைக்காக…
கருவறையிலேயே உதைத்த உன்னை
உச்சி முகர்ந்தெடுத்து முதன் முதலாய்
முத்தமிட்டு வரவேற்றவள் நீ !
நான் நடைபயில என்னைத் தாங்கிப்
பிடிக்க அதிக முறை விழுந்தவள் நீ !
என் காயங்களுக்கு உன் கண்ணீரால்
மருந்திட்டு நான் சிந்திய இரத்தத்தையே
மலிவாக்கி விட்டாயடி !
படிப்பு வாசணையே இல்லாத நீ
நான் பட்டம் வாங்கி வர
பருத்திப் பஞ்சாய் போனதென்னோ !
ஐந்துக்கும் பத்துக்கும் கீரை வித்து
அதை கடுகு டப்பியில் போட்டு வைச்சு
ஐணூறுயாக்கிக் கொடுத்த பணத்தோட
வாசம் இன்னும் போகலையே !
பத்து மாதம் சுமந்ததிற்கே பல
கோடி ஜென்மத்திற்கும் என்னை
கடன்காரன் ஆக்கிப்புட்ட !
கோடி முறை பிறந்தாலும் – உன்
காலடியில் வளரும் பாக்கியம் மட்டும்
போதுமடி மீண்டும் உன் மடியில் தவழும்
மழலையாய் !…
உச்சி முகர்ந்தெடுத்து முதன் முதலாய்
முத்தமிட்டு வரவேற்றவள் நீ !
நான் நடைபயில என்னைத் தாங்கிப்
பிடிக்க அதிக முறை விழுந்தவள் நீ !
என் காயங்களுக்கு உன் கண்ணீரால்
மருந்திட்டு நான் சிந்திய இரத்தத்தையே
மலிவாக்கி விட்டாயடி !
படிப்பு வாசணையே இல்லாத நீ
நான் பட்டம் வாங்கி வர
பருத்திப் பஞ்சாய் போனதென்னோ !
ஐந்துக்கும் பத்துக்கும் கீரை வித்து
அதை கடுகு டப்பியில் போட்டு வைச்சு
ஐணூறுயாக்கிக் கொடுத்த பணத்தோட
வாசம் இன்னும் போகலையே !
பத்து மாதம் சுமந்ததிற்கே பல
கோடி ஜென்மத்திற்கும் என்னை
கடன்காரன் ஆக்கிப்புட்ட !
கோடி முறை பிறந்தாலும் – உன்
காலடியில் வளரும் பாக்கியம் மட்டும்
போதுமடி மீண்டும் உன் மடியில் தவழும்
மழலையாய் !…
மானசிக காதலி…
நீ பூமியில் பிறந்ததால் என்னவோ
தன்னிலை மறந்தே சுற்றுகிறது பூமியும் !
தன்னிலை மறந்தே சுற்றுகிறது பூமியும் !
நீ பறந்து விடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ
வலை வீசியே காத்திருக்கிறது வானமும் !
நீ உன்னை ரசிக்க வேண்டும் என்பதற்காகவோ என்னவோ
உன்னைப் பிரதிபலித்தே செல்கிறது நிலவும் !
உனது காலடிச் சுவடுகளையாவது பதிக்க
துடிதுடித்துக் கிடக்கிறது பாதையும் !
வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டவளே !
என் வாழ்நாள் முடியும் வரை மட்டும்
என்னோடு இருந்து விடு என் மானசிக காதலியாய் !…
நினைவுகள்
முன்னோக்கிச் செல்லும் பயணங்களிலும்
பின்னோக்கியே செல்கிறது உன்னுடன்
உறவாடிய நிகழ்வுகளும் நினைவுகளும் !
செல்லும் பாதையெல்லாம் தேடிக்கொண்டு
இருக்கிறேன் என்னவளின் பிம்பங்களையும்
காலடிச் சுவடுகளையும் !
இதயம் என்னுளே பதிர்ந்திருந்தாலும்
உனக்காகவே துடித்துக் கொண்டிருக்கிறது !
இப்படிக்கு
ஒவ்வொரு முறையும் உன்
நினைவுகளையே கைகோர்த்து செல்லும்
நான்
எனது தேசம் – வரமா இல்லை சாபமா !…
பாரதி கண்ட கனவு தேசம்
களவு தேசமாய் கரு மாறிக்கொண்டிருக்கிறது
!
தண்ணீர் தேசம் கண்ணீர் தேசமாய்
உருமாறிக் கொண்டிருக்கிறது !
மரங்களை வெட்டி வெட்டி
மனிதர்களை வெட்ட பழகிக் கொண்டோம் !
மனிதாபிமானம் மலிவு விலையில்
மண்புழுவாய் நெளிந்து கொண்டிருக்கிறது !
இளைய சமுதாயம் கேளிக்கைகளிலும்
ஆடம்பரங்களிலும் ஆர்பரித்துக்
கொண்டிருக்கிறது !
நடைமுறையை மறந்து தலைமுறைக்காக சொத்து
சேர்த்துக் காசுக்காக கடவுளையே கடைத் தெருவில்
விற்றுக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் !
பசியும் பட்டினியும் தான் என்
மக்களின் வரமா இல்லை சாபமா !
செந்நீர் சிந்தித் தான் இக்கண்ணீர்
தேசத்தை களையெடுக்க வேண்டுமா
!
Subscribe to:
Posts (Atom)
காதல்
நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...
-
வானம் பொய்த்து விட்டதால் இயற்கையிடம் ஏமாறுகிறான் வியாபாறியாய் தோற்கிறான் அரசியலால் வஞ்சிக்கப்படுகிறான் ஆனால் எப்பொழுதும் ...
-
முன்னோக்கிச் செல்லும் பயணங்களிலும் பின்னோக்கியே செல்கிறது உன்னுடன் உறவாடிய நிகழ்வுகளும் நினைவுகளும் ! செல்லும் பாதையெல்லாம்...