Monday, December 03, 2012

அன்னைக்காக…

கருவறையிலேயே உதைத்த உன்னை

உச்சி முகர்ந்தெடுத்து முதன் முதலாய்

முத்தமிட்டு வரவேற்றவள் நீ ! 



நான் நடைபயில என்னைத் தாங்கிப்

பிடிக்க அதிக முறை விழுந்தவள் நீ ! 


என் காயங்களுக்கு உன் கண்ணீரால்

மருந்திட்டு நான் சிந்திய இரத்தத்தையே

மலிவாக்கி விட்டாயடி ! 


படிப்பு வாசணையே இல்லாத நீ

நான் பட்டம் வாங்கி வர

பருத்திப் பஞ்சாய் போனதென்னோ ! 


ஐந்துக்கும் பத்துக்கும் கீரை வித்து

அதை கடுகு டப்பியில் போட்டு வைச்சு

ஐணூறுயாக்கிக் கொடுத்த பணத்தோட

வாசம் இன்னும் போகலையே ! 


பத்து மாதம் சுமந்ததிற்கே பல

கோடி ஜென்மத்திற்கும் என்னை

கடன்காரன் ஆக்கிப்புட்ட ! 


கோடி முறை பிறந்தாலும் – உன்

காலடியில் வளரும் பாக்கியம் மட்டும்

போதுமடி மீண்டும் உன் மடியில் தவழும்

மழலையாய் !…


No comments:

Post a Comment

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...