கருவறையிலேயே உதைத்த உன்னை
உச்சி முகர்ந்தெடுத்து முதன் முதலாய்
முத்தமிட்டு வரவேற்றவள் நீ !
நான் நடைபயில என்னைத் தாங்கிப்
பிடிக்க அதிக முறை விழுந்தவள் நீ !
என் காயங்களுக்கு உன் கண்ணீரால்
மருந்திட்டு நான் சிந்திய இரத்தத்தையே
மலிவாக்கி விட்டாயடி !
படிப்பு வாசணையே இல்லாத நீ
நான் பட்டம் வாங்கி வர
பருத்திப் பஞ்சாய் போனதென்னோ !
ஐந்துக்கும் பத்துக்கும் கீரை வித்து
அதை கடுகு டப்பியில் போட்டு வைச்சு
ஐணூறுயாக்கிக் கொடுத்த பணத்தோட
வாசம் இன்னும் போகலையே !
பத்து மாதம் சுமந்ததிற்கே பல
கோடி ஜென்மத்திற்கும் என்னை
கடன்காரன் ஆக்கிப்புட்ட !
கோடி முறை பிறந்தாலும் – உன்
காலடியில் வளரும் பாக்கியம் மட்டும்
போதுமடி மீண்டும் உன் மடியில் தவழும்
மழலையாய் !…
உச்சி முகர்ந்தெடுத்து முதன் முதலாய்
முத்தமிட்டு வரவேற்றவள் நீ !
நான் நடைபயில என்னைத் தாங்கிப்
பிடிக்க அதிக முறை விழுந்தவள் நீ !
என் காயங்களுக்கு உன் கண்ணீரால்
மருந்திட்டு நான் சிந்திய இரத்தத்தையே
மலிவாக்கி விட்டாயடி !
படிப்பு வாசணையே இல்லாத நீ
நான் பட்டம் வாங்கி வர
பருத்திப் பஞ்சாய் போனதென்னோ !
ஐந்துக்கும் பத்துக்கும் கீரை வித்து
அதை கடுகு டப்பியில் போட்டு வைச்சு
ஐணூறுயாக்கிக் கொடுத்த பணத்தோட
வாசம் இன்னும் போகலையே !
பத்து மாதம் சுமந்ததிற்கே பல
கோடி ஜென்மத்திற்கும் என்னை
கடன்காரன் ஆக்கிப்புட்ட !
கோடி முறை பிறந்தாலும் – உன்
காலடியில் வளரும் பாக்கியம் மட்டும்
போதுமடி மீண்டும் உன் மடியில் தவழும்
மழலையாய் !…
No comments:
Post a Comment