Monday, December 03, 2012

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்

நீ நாணி,குறுகி

தலை குனிந்து நெளியும்

போது கீழ் வானமும் சிவக்கிறது

வெட்கப்பட்டு! 



ஒற்றையடி பாதையில்

கருப்பு சல்வாரில்

ஒற்றை ரோஜாவாய்

நீ செல்லும் போது

பாதையும் மெய் மறந்து

ரசிக்கிறது

செல்லும் திசை தெரியாமல் !


படைத்தவனையே

பதம் பார்க்க துடிக்கும்

பஞ்சலோக சிலையடி

நீ !… 


இயற்கையையே

புரட்டி போட துடிக்கும்

எழில் மங்கை

நீ !… 


இதில் நான் மட்டும்

எம்மாத்திரம் ! …


No comments:

Post a Comment

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...