Friday, December 07, 2012

தனிமையில் நான்

உன் கரம் பிடித்தே சாலையை

கடந்த பாதங்கள் நீயில்லாமல்

தயங்கியே கடக்கின்றன தனிமையில் !

உன் தோள் சாய்ந்தே

கண்ட உறக்கமும் நீயில்லாமல்

கலைந்தே போகிறது கவலையுடன் !

தினமும் உன் குரல் கேட்டே

விழிக்கும் அலைபேசியும் நீயில்லாமல்

காத்தே கிடக்கிறது மவுனமாய் !

காதல் வேர்களை படரவிட்டு

என் உணர்வுகளை மட்டும்

தனிமையில் தவிக்க விடுவதேனோ !





No comments:

Post a Comment

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...