உன் கரம் பிடித்தே சாலையை
கடந்த பாதங்கள் நீயில்லாமல்
தயங்கியே கடக்கின்றன தனிமையில் !
உன் தோள் சாய்ந்தே
கண்ட உறக்கமும் நீயில்லாமல்
கலைந்தே போகிறது கவலையுடன் !
தினமும் உன் குரல் கேட்டே
விழிக்கும் அலைபேசியும் நீயில்லாமல்
காத்தே கிடக்கிறது மவுனமாய் !
காதல் வேர்களை படரவிட்டு
என் உணர்வுகளை மட்டும்
தனிமையில் தவிக்க விடுவதேனோ !
கடந்த பாதங்கள் நீயில்லாமல்
தயங்கியே கடக்கின்றன தனிமையில் !
உன் தோள் சாய்ந்தே
கண்ட உறக்கமும் நீயில்லாமல்
கலைந்தே போகிறது கவலையுடன் !
தினமும் உன் குரல் கேட்டே
விழிக்கும் அலைபேசியும் நீயில்லாமல்
காத்தே கிடக்கிறது மவுனமாய் !
காதல் வேர்களை படரவிட்டு
என் உணர்வுகளை மட்டும்
தனிமையில் தவிக்க விடுவதேனோ !
No comments:
Post a Comment