Monday, December 03, 2012

மானசிக காதலி…

நீ பூமியில் பிறந்ததால் என்னவோ

தன்னிலை மறந்தே சுற்றுகிறது பூமியும் ! 


நீ பறந்து விடக் கூடாது என்பதற்காகவோ என்னவோ

வலை வீசியே காத்திருக்கிறது வானமும் ! 


நீ உன்னை ரசிக்க வேண்டும் என்பதற்காகவோ என்னவோ

உன்னைப் பிரதிபலித்தே செல்கிறது நிலவும் ! 


உனது காலடிச் சுவடுகளையாவது பதிக்க

துடிதுடித்துக் கிடக்கிறது பாதையும் !

வர்ணனைகளுக்கு அப்பாற்பட்டவளே ! 


என் வாழ்நாள் முடியும் வரை மட்டும்

என்னோடு இருந்து விடு என் மானசிக காதலியாய் !…

No comments:

Post a Comment

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...