நீ அருகில் பயணிப்பதால்
என்னவோ
தொலை தூரப் பயணம் கூட
தொலைந்தே போகிறது
வினாடிகளாய் !
உன் கூந்தலில் குடியேறுவதால்
என்னவோ
மல்லிகைக்கும் மதம் பிடித்து
மணக்கிறது !
காற்றுக்கும் வாசம் உண்டு
என்பதை உணர்கிறேனடி
உன்னைத் தீண்டி
அது என்னைக்
கடக்கும் போது !
ஒற்றைத் துளியென்றாலும்
என்னை நனைக்கிறாய்யடி
சாரலாய் என்றென்றும் !…
No comments:
Post a Comment