Monday, December 03, 2012

என்னருகில் நீ

நீ அருகில் பயணிப்பதால்

என்னவோ

தொலை தூரப் பயணம் கூட

தொலைந்தே போகிறது

வினாடிகளாய் ! 



உன் கூந்தலில் குடியேறுவதால்

என்னவோ

மல்லிகைக்கும் மதம் பிடித்து

மணக்கிறது ! 


காற்றுக்கும் வாசம் உண்டு

என்பதை உணர்கிறேனடி

உன்னைத் தீண்டி

அது என்னைக்

கடக்கும் போது ! 


ஒற்றைத் துளியென்றாலும்

என்னை நனைக்கிறாய்யடி

சாரலாய் என்றென்றும் !…




No comments:

Post a Comment

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...