Monday, December 03, 2012

என் தோழியாய்

என் வாழ்க்கைப் பயணத்தில்

விடிவெள்ளியாய் நீ வேண்டும் ! 

ஓடும் நதியிலும் என்னைத் தீண்டும்

கரையாய் நீ வேண்டும் !

கொடி என்றாலும் என்னை ஊண்றிப்

பிடிக்கும் ஆனி வேராய் நீ வேண்டும் !

கொட்டும் மழையிலும் உடன் நனையும்

தோழியாய் நீ வேண்டும் !

இடர்பாடுகளுக்குக் இடையில் இளைப்பார

என்றென்றும் நீ வேண்டும்

என் தோழியாய் !



No comments:

Post a Comment

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...