தினமும்
உன் அழகைக் கண்டு
நிலைக் கண்ணாடியும்
நொருங்கித் துடிக்கிறது !
தினமும்
உன்னைக் காண
நாள்காட்டியும்
ஓடாய்த் தேய்கிறது !
உன்னை நினைத்து
கடிகார முட்களும்
சுற்றிச் சுற்றி
களைக்கிறது !
நீ உறங்கும்
நேரத்தில் நட்சச்திரமும்
கண் சிமிட்டி
ரசிக்கிறது !
இவை கிறுக்கல்களாய்
என்னை மறந்து
உன்னை நினைத்த
வேளையில் !…
No comments:
Post a Comment