கட்டிக் கொடுத்த பெரியவளோ கால் பவுனு
கல் வைச்ச முக்குத்தி
கேட்டு வந்து மாசம் ஆறாக !
இளையவளோ சீமக்கார மவராசன்
கைப் பிடிச்சுக் கரைசேர காத்திருக்க !
சின்னவளோ தாய்மாமன் சீர் நோக்கி
பச்சை குடில் தேடி படர்ந்திருக்க !
மேட்டுக்காட்டில் விதைச்ச நெல்லோ
வறட்சியிலும் வானம் பாத்து பல் இளிக்க !
காப்படி கஞ்சிக்கே கால் வருஷம் காத்திருக்க !
எனக்கு வாக்கப்பட்டு வந்து
வாழுந்து முடிச்சு என்னை பாதியிலே
விட்டு போனவளுக்கு
படையல் வைக்க பச்சக்கண்ணாடி
வளையல் தேடி மீதி உயிரும் போனதென்னோ !
கல் வைச்ச முக்குத்தி
கேட்டு வந்து மாசம் ஆறாக !
இளையவளோ சீமக்கார மவராசன்
கைப் பிடிச்சுக் கரைசேர காத்திருக்க !
சின்னவளோ தாய்மாமன் சீர் நோக்கி
பச்சை குடில் தேடி படர்ந்திருக்க !
மேட்டுக்காட்டில் விதைச்ச நெல்லோ
வறட்சியிலும் வானம் பாத்து பல் இளிக்க !
காப்படி கஞ்சிக்கே கால் வருஷம் காத்திருக்க !
எனக்கு வாக்கப்பட்டு வந்து
வாழுந்து முடிச்சு என்னை பாதியிலே
விட்டு போனவளுக்கு
படையல் வைக்க பச்சக்கண்ணாடி
வளையல் தேடி மீதி உயிரும் போனதென்னோ !
No comments:
Post a Comment