Monday, December 03, 2012

வறுமைக் காதல்

கட்டிக் கொடுத்த பெரியவளோ கால் பவுனு

கல் வைச்ச முக்குத்தி

கேட்டு வந்து மாசம் ஆறாக ! 



இளையவளோ சீமக்கார மவராசன்

கைப் பிடிச்சுக் கரைசேர காத்திருக்க ! 


சின்னவளோ தாய்மாமன் சீர் நோக்கி

பச்சை குடில் தேடி படர்ந்திருக்க ! 


மேட்டுக்காட்டில் விதைச்ச நெல்லோ

வறட்சியிலும் வானம் பாத்து பல் இளிக்க ! 


காப்படி கஞ்சிக்கே கால் வருஷம் காத்திருக்க ! 


எனக்கு வாக்கப்பட்டு வந்து

வாழுந்து முடிச்சு என்னை பாதியிலே

விட்டு போனவளுக்கு

படையல் வைக்க பச்சக்கண்ணாடி

வளையல் தேடி மீதி உயிரும் போனதென்னோ !


No comments:

Post a Comment

காதல்

நகராத மணித்துளிகள் ஏக்கத்துடன் பார்க்கும் நாள்காட்டி கனவுகளில் கரையும் நினைவுகள் உறக்கம் தொலைத்த இதயத்தில் உனக்காக கர்வத்துடன் தழைக்கும் க...