பாரதி கண்ட கனவு தேசம்
களவு தேசமாய் கரு மாறிக்கொண்டிருக்கிறது
!
தண்ணீர் தேசம் கண்ணீர் தேசமாய்
உருமாறிக் கொண்டிருக்கிறது !
மரங்களை வெட்டி வெட்டி
மனிதர்களை வெட்ட பழகிக் கொண்டோம் !
மனிதாபிமானம் மலிவு விலையில்
மண்புழுவாய் நெளிந்து கொண்டிருக்கிறது !
இளைய சமுதாயம் கேளிக்கைகளிலும்
ஆடம்பரங்களிலும் ஆர்பரித்துக்
கொண்டிருக்கிறது !
நடைமுறையை மறந்து தலைமுறைக்காக சொத்து
சேர்த்துக் காசுக்காக கடவுளையே கடைத் தெருவில்
விற்றுக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் !
பசியும் பட்டினியும் தான் என்
மக்களின் வரமா இல்லை சாபமா !
செந்நீர் சிந்தித் தான் இக்கண்ணீர்
தேசத்தை களையெடுக்க வேண்டுமா
!
No comments:
Post a Comment